செய்திகள்
கிருஷ்ணகிரியில் ரகளையில் ஈடுபட்ட விஜய் ரசிகர்கள் 28 பேருக்கு ஜாமீன்
கிருஷ்ணகிரியில் பிகில் திரைப்படம் வெளியிடுவதில் காலதாமதம் ஏற்பட்டதால் வன்முறையில் ஈடுபட்டு கைதானவர்களில் 28 பேருக்கு நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது.
கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரியில் கடந்த 25-ந்தேதி இரவு, விஜய் நடித்த பிகில் திரைப்படம் வெளியிடுவதில் காலதாமதம் ஏற்பட்டதால், ஆத்திரம் அடைந்த அவரது ரசிகர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் கிருஷ்ணகிரி ரவுண்டானாவில் ஒன்று கூடி, ரகளையில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் அங்குள்ள பொருட்களை அடித்து நொறுக்கினர்.
இந்த சம்பவம் குறித்து கிருஷ்ணகிரி டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து அங்குள்ள சி.சி.டி.வி. கேமிராவில் பதிவான காட்சிகளை வைத்து விஜய் ரசிகர்கள் 50 பேரையும் கைது செய்தனர்.
கைதான விஜய் ரசிகர்களில் 28 பேர் கிருஷ்ணகிரி மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் ஜாமீன் கேட்டு மனு அளித்து இருந்தனர்.
மனுவை விசாரித்த நீதிபதி 28 பேருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.
கிருஷ்ணகிரியில் கடந்த 25-ந்தேதி இரவு, விஜய் நடித்த பிகில் திரைப்படம் வெளியிடுவதில் காலதாமதம் ஏற்பட்டதால், ஆத்திரம் அடைந்த அவரது ரசிகர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் கிருஷ்ணகிரி ரவுண்டானாவில் ஒன்று கூடி, ரகளையில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் அங்குள்ள பொருட்களை அடித்து நொறுக்கினர்.
இந்த சம்பவம் குறித்து கிருஷ்ணகிரி டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து அங்குள்ள சி.சி.டி.வி. கேமிராவில் பதிவான காட்சிகளை வைத்து விஜய் ரசிகர்கள் 50 பேரையும் கைது செய்தனர்.
கைதான விஜய் ரசிகர்களில் 28 பேர் கிருஷ்ணகிரி மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் ஜாமீன் கேட்டு மனு அளித்து இருந்தனர்.
மனுவை விசாரித்த நீதிபதி 28 பேருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.