செய்திகள்
தாக்குதல்

மதுரையில் பழ வியாபாரி மீது சரமாரி தாக்குதல்- 2 வாலிபர்கள் கைது

Published On 2019-11-05 09:47 GMT   |   Update On 2019-11-05 09:47 GMT
மதுரையில் பழ வியாபாரியை சரமாரியாக தாக்கிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

மதுரை:

மதுரை யாகப்பா நகர், அப்பாஸ் தெருவைச் சேர்ந்தவர் மூர்த்தி (வயது 58). இவர் கீழப்பெருமாள் மேஸ்திரி வீதியில் உள்ள வாழைக்காய் பேட்டையில் பழ வியாபாரம் செய்து வருகிறார்.

சம்பவத்தன்று இவரது கடைக்கு கீரைத்துறை காமராஜர்புரத்தைச் சேர்ந்த கார்த்தி (24), திருஞானமூர்த்தி மகன் கரண் (20) ஆகியோர் வந்தனர்.

அவர்கள் பழம் சாப்பிட்டு விட்டு பணம் கொடுப்பதில் தகராறு செய்ததாக தெரிகிறது. இதனால் மூர்த்திக்கும், 2 வாலிபர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

ஆத்திரம் அடைந்த 2 பேரும் மூர்த்தியை சரமாரியாக தாக்கினர். இதில் அவருக்கு காயம் ஏற்பட்டது. இது குறித்து விளக்குத்தூண் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து கார்த்தி, கரணை கைது செய்தனர்.

Tags:    

Similar News