செய்திகள்
கைது

வேப்பனபள்ளியில் கஞ்சா விற்ற- வாலிபர் கைது

Published On 2019-11-04 14:09 GMT   |   Update On 2019-11-04 14:09 GMT
வேப்பனபள்ளியில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது கஞ்சா விற்ற வாலிபரை கைது செய்தனர்.
கிருஷ்ணகிரி:

கிருஷ்ணகிரி மாவட்டம், வேப்பனபள்ளி போலீஸ் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் ராமநாதன் மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

அப்போது வேப்பன பள்ளி பகுதியில் உள்ள எம்.எல்.ஏ அலுவலகம் முன்பு சந்தேகத்திற்கு இடமாக நின்றுகொண்டிருந்த வாலிபரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தியுள்ளனர். அப்போது அவர் முன்னுக்குபின் முரணாக பதில் கூறியுள்ளார். அதனால் சந்தேகமடைந்த போலீசார் அந்த வாலிபரை பிடித்து சோதனையில் அவரிடம் 200 கிராம் அளவிலான கஞ்சா இருந்துள்ளது. மேலும் போலீசார் அவரிடம் நடத்திய விசாரணையில் அவர் வேப்பனபள்ளி பகுதியைச் சேர்ந்த சசிகுமார்(19) என்பதும், அப்பகுதியில் சட்ட விரோதமாக கஞ்சா விற்பனை செய்ததும் தெரியவந்தது.

இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்தனர்.
Tags:    

Similar News