செய்திகள்
கடத்தல்

விருதுநகரில் 10-ம் வகுப்பு மாணவி கடத்தல்

Published On 2019-11-04 09:54 GMT   |   Update On 2019-11-04 09:54 GMT
விருதுநகரில் 10-ம் வகுப்பு மாணவி கடத்தப்பட்டதாக போலீசில் புகார் செய்யப்பட்டது.

விருதுநகர்:

விருதுநகர் அய்யனார் நகரைச் சேர்ந்த 15 வயது சிறுமி அந்தப்பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வருகிறார். நேற்று முன்தினம் அந்த மாணவி திடீரென மாயமானார். பல இடங்களில் தேடியும் மாணவி பற்றி எந்தவித தகவலும் கிடைக்க வில்லை.

இது குறித்து விருதுநகர் மேற்கு போலீசில் மாணவியின் தாயார் புகார் கொடுத்துள்ளார். அதில், அந்தப்பகுதியைச் சோந்த மாரிக்கனி என்பவர் தனது மகளை கடத்திச் சென்றிருக்கலாம் என சந்தேகம் உள்ளதாக தெரிவித்துள்ளார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதேபோல் விருதுநகர் சத்யசாய் நகரைச் சேர்ந்தவர் லலிதா. இவரது 2-வது மகள் சுகுணா (19), மதுரையில் தனியார் கல்லூரி விடுதியில் தங்கி படித்து வருகிறார்.

தீபாவளி விடுமுறைக்காக வீட்டுக்கு வந்திருந்த சுகுணா, வீட்டில் பெற்றோர் இல்லாத நேரத்தில் மாயமாகி விட்டார். பல இடங்களில் தேடியும் அவரை பற்றி எந்த தகவலும் கிடைக்கவில்லை.

இது குறித்து விருதுநகர் கிழக்கு போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான சுகுணாவை தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News