செய்திகள்
களக்காடு அருகே மது பாட்டில் விற்பனை- 2 பேர் கைது
களக்காடு அருகே மது பாட்டில் விற்பனை செய்த 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
களக்காடு:
களக்காடு சப்-இன்ஸ்பெக்டர் லிபிபால் ராஜ் மற்றும் போலீசார் கீழதேவநல்லூர் பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அங்குள்ள பஸ் நிறுத்தம் அருகே அதே ஊரைச் சேர்ந்த தர்மராஜ் மகன் சுடலை (வயது 30), ராமசுப்பிரமணியன் மகன் ஐயப்பன் (29) ஆகியோர் கையில் சாக்குப்பையுடன் நின்று கொண்டிருந்தனர். போலீசாரை பார்த்ததும் 2 பேரும் தப்பி ஓட முயற்சி செய்தனர். போலீசார் அவர்களை விரட்டி பிடித்து விசாரித்தனர்.
விசாரணையில் 2 பேரும் அனுமதி இன்றி மதுபாட்டில்களை பதுக்கி வைத்து அதிக விலைக்கு விற்பனை செய்தது தெரியவந்தது. இதையடுத்து 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர்களிடமிருந்து 5 மதுபாட்டில்களும், ரூ.200-ம் பறிமுதல் செய்யப்பட்டது.