செய்திகள்
கவர்னர் கிரண்பேடி

பேய் என்று கூறுவதா? நாராயணசாமிக்கு கவர்னர் கிரண்பேடி பதிலடி

Published On 2019-11-01 21:50 GMT   |   Update On 2019-11-01 21:50 GMT
கவர்னர் கிரண்பேடியை பேய் என்று விமர்சனம் செய்த முதல்- அமைச்சர் நாராயணசாமிக்கு அவர் பதிலடி கொடுத்துள்ளார்.
புதுச்சேரி:

புதுவை காங்கிரஸ் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முதல்-அமைச்சர் நாராயணசாமி பேசும்போது, கவர்னர் கிரண்பேடியை பேய் என்று விமர்சனம் செய்தார்.

இதற்கு பதிலடி தரும் வகையில் கவர்னர் கிரண்பேடி சமூக வலைதளத்தில், “நிதி கட்டுப்பாடுகள் இருந்தாலும் அரசு அதிகாரிகள் மக்களுக்கு அதிகளவு நன்மை செய்ய வேண்டியது அவசியம். ஆனால், பேய்கள் யாருக்கும் நல்லது செய்யாது. அனைத்தும் தனக்கே தேவை என பேய்கள் நினைக்கும். குறிப்பாக மக்களை பேய்கள் பயமுறுத்தும். 

அரசு அதிகாரிகள் பணியானது மக்களை பாதுகாப்பது தான். பேய் என்ற வார்த்தை தேவையில்லாதது. நாகரிகமற்றது. அருவருப்பானது. அந்த கருத்தை ஏற்கமுடியாது” என்று கூறியுள்ளார்.
Tags:    

Similar News