செய்திகள்
மதுரையில் வெளிநாட்டு பெண்ணுக்கு பாலியல் தொல்லை- மெக்கானிக் கைது
வெளிநாட்டு பெண்ணிடம் அத்துமீறி நடந்து பாலியல் தொல்லை கொடுத்த மதுரையைச் சேர்ந்த மெக்கானிக்கை போலீசார் கைது செய்தனர்.
மதுரை:
ஆஸ்திரேலியா மெல்போர்ன் நகரைச் சேர்ந்தவர் சாராலூயிஸ் (வயது 26). அங்குள்ள குழந்தைகள் நல வாழ்வு மையத்தில் பணி புரிந்து வரும் இவர் கடந்த மாதம் இந்தியாவுக்கு சுற்றுலா வந்தார்.
ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூர் சென்று விட்டு கேரள மாநிலம் தேக்கடி செல்ல சாராலூயிஸ் திட்டமிட்டார். இதற்காக மதுரை வந்த அவர் சம்பவத்தன்று இரவு ரெயில்வே காலனி நுழைவு வாயிலில் உள்ள ஏ.டி.எம்.முக்கு பணம் எடுக்க வந்தார்.
அப்போது எஸ்.எஸ். காலனி, நேரு நகர், சந்தானம் தெருவைச் சேர்ந்த ஸ்ரீதரன் (26) என்பவர் சாராலூயிசிடம் ‘செல்பி’ எடுக்க ஒத்துழைக்குமாறு வற்புறுத்தினார். ஆனால் அதற்கு அந்த பெண் மறுத்து விட்டார்.
இதனால் ஆத்திரமடைந்த ஸ்ரீதரன், சாரா லூயிசிடம் அத்துமீறி நடந்து கொண்டதோடு, பாலியல் தொல்லையும் கொடுத்துவிட்டு தப்பினார்.
இது குறித்து சாரா லூயிஸ் எஸ்.எஸ்.காலனி போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து இளம்பெண்ணிடம் தவறாக நடந்து கொண்ட ஸ்ரீதரனை கைது செய்தனர். இவர் ஓசூரில் மெக்கானிக்காக பணிபுரிந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆஸ்திரேலியா மெல்போர்ன் நகரைச் சேர்ந்தவர் சாராலூயிஸ் (வயது 26). அங்குள்ள குழந்தைகள் நல வாழ்வு மையத்தில் பணி புரிந்து வரும் இவர் கடந்த மாதம் இந்தியாவுக்கு சுற்றுலா வந்தார்.
ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூர் சென்று விட்டு கேரள மாநிலம் தேக்கடி செல்ல சாராலூயிஸ் திட்டமிட்டார். இதற்காக மதுரை வந்த அவர் சம்பவத்தன்று இரவு ரெயில்வே காலனி நுழைவு வாயிலில் உள்ள ஏ.டி.எம்.முக்கு பணம் எடுக்க வந்தார்.
அப்போது எஸ்.எஸ். காலனி, நேரு நகர், சந்தானம் தெருவைச் சேர்ந்த ஸ்ரீதரன் (26) என்பவர் சாராலூயிசிடம் ‘செல்பி’ எடுக்க ஒத்துழைக்குமாறு வற்புறுத்தினார். ஆனால் அதற்கு அந்த பெண் மறுத்து விட்டார்.
இதனால் ஆத்திரமடைந்த ஸ்ரீதரன், சாரா லூயிசிடம் அத்துமீறி நடந்து கொண்டதோடு, பாலியல் தொல்லையும் கொடுத்துவிட்டு தப்பினார்.
இது குறித்து சாரா லூயிஸ் எஸ்.எஸ்.காலனி போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து இளம்பெண்ணிடம் தவறாக நடந்து கொண்ட ஸ்ரீதரனை கைது செய்தனர். இவர் ஓசூரில் மெக்கானிக்காக பணிபுரிந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.