செய்திகள்
புகார்

திருப்பூர் மாவட்ட நீதிபதி குறித்து அவதூறு வீடியோ- மத்திய குற்றப்பிரிவு போலீசில் புகார்

Published On 2019-10-30 17:58 GMT   |   Update On 2019-10-30 17:58 GMT
திருப்பூர் மாவட்ட நீதிபதி குறித்து அவதூறு வீடியோ வெளியிட்டுள்ள மர்ம நபர் மீது மத்திய குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

திருப்பூர்:

திருப்பூர் மாவட்ட முதன்மை நீதிபதி திருப்பூர் மாநகர மத்திய குற்றப்பிரிவு போலீசில் புகார் மனு அளித்துள்ளார். அதில் கூறி இருப்பதாவது-

திருப்பூர் மாவட்ட நீதிபதி, தாராபுரம் மாஜிஸ்திரேட்டு, கோர்ட்டு அலுவலர்கள், ஜெயில் வார்டன்கள், வக்கீல்கள், போலீசார் குறித்து மர்ம நபர் அவதூறாக பேசி யூ டியூப்பில் வீடியோ வெளியிட்டு உள்ளார்.

கடந்த 24-ந் தேதி முதல் 27-ந் தேதி வரை அவர் 3 வீடியோக்களை வெளியிட்டு உள்ளார். அவர் யார்? என்பதை கண்டறிந்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு புகார் மனுவில் கூறி உள்ளார்.

இதனை தொடர்ந்து மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குபதிவு செய்து நீதிபதி, போலீசார், வக்கீல்கள் மீது அவதூறாக யூடியூப்பில் பரவ விட்ட மர்ம நபர் யார்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News