செய்திகள்
தாக்குதல்

நெட்டப்பாக்கத்தில் பெயிண்டர் மீது தாக்குதல்- 2 பேருக்கு வலைவீச்சு

Published On 2019-10-30 14:01 GMT   |   Update On 2019-10-30 14:01 GMT
நெட்டப்பாக்கத்தில் மது அருந்திக் கொண்டிருந்த போது ஏற்பட்ட வாய் தகராறில் பெயிண்டரை தாக்கிய 2 பேரை போலீசார் தேடி வருகிறார்கள்.
சேதராப்பட்டு:

நெட்டப்பாக்கத்தை அடுத்த மடுகரை இந்திரா நகரை சேர்ந்தவர் கந்தன் (வயது 29). பெயிண்டர். நேற்று மழப்பாக்கம் பகுதியில் உள்ள தனியார் மதுக்கடையில் மது அருந்தி கொண்டு இருந்தார். மடுகரை டி.ஆர். நகரை சேர்ந்த விக்கி என்ற சரவணன் (27), எம்.ஆர்.எஸ். நகரை சேர்ந்த போன்ஸா என்கிற மாரியப்பன் (29) என்பவரும் மது அருந்திக் கொண்டு இருந்தனர். 

அப்போது திடீரென கந்தனுக்கும், விக்கிக்கும் வாய் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த விக்கி மற்றும் போன்ஸா ஆகிய இருவரும் சேர்ந்து காலி பீர்பாட்டிலால் கந்தனின் முகத்தில் தாக்கி விட்டு கொலை மிரட்டல் விடுத்து விட்டு தப்பி ஓடிவிட்டனர். 

இதுகுறித்து கந்தன் மடுகரை போலீசில் புகார் செய்தார்.  அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் ராஜேஷ் வழக்குபதிவு செய்து தப்பி ஓடியவர்களை தேடி வருகின்றார்.
Tags:    

Similar News