செய்திகள்
சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதியாக ஏ.பி.சாஹி நியமனம்
சென்னை ஐகோட்டுக்கு தலைமை நீதிபதியாக ஏ.பி.சாஹி நியமனம் செய்து ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் உத்தரவிட்டுள்ளார்.
சென்னை:
பாட்னா ஐகோர்ட் தலைமை நீதிபதியாக பதவி வகித்து வரும் ஏ.பி.சாஹி, சென்னை ஐகோர்ட்டுக்கு மாற்றம் செய்யப்பட்டு உள்ளார்.
இவரை சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதியாக நியமனம் செய்யலாம் என கொலிஜியம் சமீபத்தில் பரிந்துரை செய்தது.
இவர் நவம்பர் 13-ம் தேதிக்குள் பதவி ஏற்க வேண்டும் என ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் உத்தரவிட்டுள்ளார்.
சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதியாக இருந்த தஹில் ரமானி மேகாலயாவுக்கு இடமாற்றம் செய்யப்பட்டதை எதிர்த்து தனது பதவியை ராஜினாமா செய்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.