செய்திகள்
பிள்ளைவாய்க்காலில் அடையாளம் தெரியாத ஆண் பிணம்
பிள்ளைவாய்க்காலில் அடையாளம் தெரியாத ஆண் பிணம் கிடந்தது. அவர் யார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
பூதலூர்:
திருக்காட்டுப்பள்ளியை அடுத்துள்ள கல்லணையில் திருக்காட்டுப்பள்ளி செல்லும் பயணிகள் நிறுத்தம் அருகே பிள்ளைவாய்க்கால் உள்ளது. இந்த பிள்ளை வாய்க்கால் கரையில் அடையாளம் தெரியாத 60 வயது மதிக்கதக்க ஆண் ஒருவர் பிணமாக கிடந்தார். இதனை அந்த வழியாக சென்றவர்கள் பார்த்து அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக இது குறித்து தோகூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பிணத்தை பார்வையிட்டனர். அங்கு பிணமாக கிடந்தவர் பச்சை கரை போட்ட வெள்ளை வேட்டியும். வெள்ளை அரைக்கை சட்டையும் அணிந்திருந்தார். ஆனால் அவர் யார் ? எந்த ஊர்? என்ற விவரம் ஏதும் தெரியவில்லை.
இது பற்றிய புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர் எப்படி இறந்தார்? என்று பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.