செய்திகள்
வில்லியனூரில் மின்சாரம் தாக்கி வாலிபர் பலி
வில்லியனூரில் மின்கோபுரம் அருகே சீரமைப்பு பணியில் ஈடுபட்ட வடமாநில வாலிபர் மின்சாரம் தாக்கி பலியான சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வில்லியனூர்:
வில்லியனூர் கணுவாய்ப்பேட்டை சுடுகாட்டு பகுதியில் உயர்மின் அழுத்த கோபுரம் உள்ளது. இங்கு சீரமைப்பு பணி நடைபெற்று வருகிறது. நேற்று மாலை இந்த பணியில் ஜார்க்கண்ட் மாநிலத்தை சேர்ந்த காண்டிராக்டு தொழிலாளியாக பியாய்லால் (வயது23) என்பவர் ஈடுபட்டார். தகுந்த பாதுகாபபு உபகரணங்களுடன் அவர் சீரமைப்பு பணியில் ஈடுபட்டாலும் அவரை திடீரென மின்சாரம் தாக்கியது.
இவர் தூக்கி வீசப்பட்டு உடல்கருகியஅவரை சக தொழிலாளர்கள் மீட்டு வில்லியனூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே பியாய்லால் பரிதாபமாக இறந்து போனார்.
இதுகுறித்த புகாரின் பேரில் வில்லியனூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நந்தகுமார் விசாரணை நடத்தி பணி பாதுகாப்பில் அஜாக்கிரதையாக இருந்ததால் காண்டிராக்கடர் ராஜசேகர், மின்துறை இளநிலை பொறியாளர் முத்துக்குமார், சூப்பர்வைசர் ஜபாரிட்டி ஆகியோர் மீது வழக்குபதிவு செய்து செய்துள்ளார்.
வில்லியனூர் கணுவாய்ப்பேட்டை சுடுகாட்டு பகுதியில் உயர்மின் அழுத்த கோபுரம் உள்ளது. இங்கு சீரமைப்பு பணி நடைபெற்று வருகிறது. நேற்று மாலை இந்த பணியில் ஜார்க்கண்ட் மாநிலத்தை சேர்ந்த காண்டிராக்டு தொழிலாளியாக பியாய்லால் (வயது23) என்பவர் ஈடுபட்டார். தகுந்த பாதுகாபபு உபகரணங்களுடன் அவர் சீரமைப்பு பணியில் ஈடுபட்டாலும் அவரை திடீரென மின்சாரம் தாக்கியது.
இவர் தூக்கி வீசப்பட்டு உடல்கருகியஅவரை சக தொழிலாளர்கள் மீட்டு வில்லியனூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே பியாய்லால் பரிதாபமாக இறந்து போனார்.
இதுகுறித்த புகாரின் பேரில் வில்லியனூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நந்தகுமார் விசாரணை நடத்தி பணி பாதுகாப்பில் அஜாக்கிரதையாக இருந்ததால் காண்டிராக்கடர் ராஜசேகர், மின்துறை இளநிலை பொறியாளர் முத்துக்குமார், சூப்பர்வைசர் ஜபாரிட்டி ஆகியோர் மீது வழக்குபதிவு செய்து செய்துள்ளார்.