செய்திகள்
தற்கொலை முயற்சி.

மன்னார்குடி அருகே காதலியை கத்தியால் குத்திவிட்டு தற்கொலைக்கு முயன்ற வாலிபர்

Published On 2019-10-25 10:07 GMT   |   Update On 2019-10-25 10:07 GMT
மன்னார்குடி அருகே வேறு வாலிபருடன் பழக்கம் ஏற்பட்டதால் காதலியை கத்தியால் குத்திவிட்டு தற்கொலைக்கு முயன்ற வாலிபரின் செயல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மன்னார்குடி:

நாகை மாவட்டத்தை சேர்ந்த ஒரு கல்லூரி மாணவியும், திருவாரூர் மாவட்டம் கோட்டூர் பகுதியை சேர்ந்த ஒரு வாலிபரும் காதலித்து வந்தனர். இவர்கள் 2 பேரும் திருமணம் செய்து கொள்ளாமல் கோட்டூர் அருகே வசித்து வந்தனர்.

இதையடுத்து இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் டிக்-டாக் செயலி மூலம் அந்த மாணவிக்கு நாமக்கல் பகுதியை சேர்ந்த வேறு வாலிபருடன் பழக்கம் ஏற்பட்டது. இதனால் அந்த மாணவி நாமக்கல்லுக்கு சென்றுள்ளார். இதையறிந்த காதலன், அந்த மாணவியை போனில் தொடர்பு கொண்டு கோட்டூருக்கு வந்து செல்லுமாறு தெரிவித்தார்.

பின்னர் நாமக்கல் வாலிபர் , மாணவி ஆகிய 2 பேரும் கோட்டூருக்கு வந்தனர். இதையடுத்து கோட்டூர் பகுதியை சேர்ந்த தாதலன் உள்பட 3 பேரும் ஆட்டோவில் சென்று கொண்டிருந்தனர்.

அப்போது மாணவிக்கும், காதலனுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் ஆத்திரம் அடைந்த காதலன், அந்த மாணவியை கத்தியால் குத்தி விட்டு, தான் வைத்திருந்த எலி மருந்தை தின்றார்.இதில் படுகாயம் அடைந்த மாணவியை அக்கம் பக்கத்தினர் மீட்டு திருவாரூர் மருத்துவக் கல்லூரி ஆஸ்பத் திரியில் சேர்த்தனர். காதலன் மன்னார்குடி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இது குறித்து மாணவி அளித்த புகாரின்பேரில் களப்பால் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News