செய்திகள்
செங்கோட்டையில் சிறுமியை திருமணம் செய்த வாலிபர் கைது
செங்கோட்டையில் 17 வயது சிறுமியை திருமணம் செய்த வாலிபரை போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.
நெல்லை:
செங்கோட்டை அண்ணா நகரைச் சேர்ந்தவர் பட்டுமணி (வயது 25). இவருக்கும் இவரது உறவினர் மகளான 17 வயது பெண்ணுக்கும் சில மாதங்களுக்கு முன்பு பெரியோர் பேசி திருமணம் செய்து வைத்தனர்.
இந்த நிலையில் பட்டுமணியின் மனைவி கர்ப்பம் அடைந்தார். இதற்காக அவர் சிகிச்சைக்கு அரசு ஆஸ்பத்திரிக்கு சென்றார். அங்கு பட்டுமணியின் மனைவி பெயரை எழுத வயதை கேட்டனர். அப்போது 17 வயது என்று அவர்கள் தெரிவித்தனர். இதனால் அதிர்ச்சி அடைந்த டாக்டர்கள், 17 வயதில் எப்படி திருமணம் செய்து வைக்கலாம் என்று மாவட்ட குழந்தைகள் நலப்பிரிவுக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் விசாரணை நடத்தி, தென்காசி அனைத்து மகளிர் போலிசில் புகார் செய்தனர். அதன்பேரில் தென்காசி மகளிர் போலீசார் ‘போக்சோ’ சட்டத்தில் கற்பழிப்பு வழக்குப்பதிவு செய்து பட்டுமணியை கைது செய்தனர். அவரது மனைவியை பெற்றோர் வீட்டுக்கு அனுப்பினர். அந்த பெண்ணுக்கு 18 வயது முடிவடைந்ததும் சேர்ந்து வாழ வலியுறுத்தி உள்ளனர்.
இந்த சம்பவம் அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
செங்கோட்டை அண்ணா நகரைச் சேர்ந்தவர் பட்டுமணி (வயது 25). இவருக்கும் இவரது உறவினர் மகளான 17 வயது பெண்ணுக்கும் சில மாதங்களுக்கு முன்பு பெரியோர் பேசி திருமணம் செய்து வைத்தனர்.
இந்த நிலையில் பட்டுமணியின் மனைவி கர்ப்பம் அடைந்தார். இதற்காக அவர் சிகிச்சைக்கு அரசு ஆஸ்பத்திரிக்கு சென்றார். அங்கு பட்டுமணியின் மனைவி பெயரை எழுத வயதை கேட்டனர். அப்போது 17 வயது என்று அவர்கள் தெரிவித்தனர். இதனால் அதிர்ச்சி அடைந்த டாக்டர்கள், 17 வயதில் எப்படி திருமணம் செய்து வைக்கலாம் என்று மாவட்ட குழந்தைகள் நலப்பிரிவுக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் விசாரணை நடத்தி, தென்காசி அனைத்து மகளிர் போலிசில் புகார் செய்தனர். அதன்பேரில் தென்காசி மகளிர் போலீசார் ‘போக்சோ’ சட்டத்தில் கற்பழிப்பு வழக்குப்பதிவு செய்து பட்டுமணியை கைது செய்தனர். அவரது மனைவியை பெற்றோர் வீட்டுக்கு அனுப்பினர். அந்த பெண்ணுக்கு 18 வயது முடிவடைந்ததும் சேர்ந்து வாழ வலியுறுத்தி உள்ளனர்.
இந்த சம்பவம் அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.