செய்திகள்
செம்மரக்கட்டை கடத்தல்

ஆந்திராவில் இருந்து காரில் செம்மரக்கட்டை கடத்தல் - 3 பேர் கைது

Published On 2019-10-25 06:44 GMT   |   Update On 2019-10-25 06:44 GMT
ஆந்திராவில் இருந்து காரில் கடத்தி வந்த சுமார் ரூ.2 லட்சம் மதிப்புள்ள செம்மரக்கட்டைகளை பறிமுதல் செய்த போலீசார் 3 பேரை கைது செய்தனர்.
கும்மிடிப்பூண்டி:

கும்மிடிப்பூண்டியை அடுத்த பெத்திக்குப்பம் பகுதியில் சப்-இன்ஸ்பெக்டர் மாரிமுத்து மற்றும் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது ஆந்திராவில் இருந்து வந்த சொகுசு காரை நிறுத்தி சோதனையிட்டனர். அதில் சுமார் ரூ.2 லட்சம் மதிப்புள்ள செம்மரக்கட்டைகள் கடத்தி வந்திருப்பது தெரிந்து.

இதையடுத்து காரில் இருந்த கும்மிப்பூண்டியில் உள்ள அகதிகள் முகாமை சேர்ந்த கிருபாகரன், கோட்டக்கரையை சேர்ந்த ஜலால், காரூர் சுதாகர் ஆகிய 3 பேரை கைது செய்தனர். காருடன் செம்மரக்கட்டை பறிமுதல் செய்யப்பட்டது.

Tags:    

Similar News