செய்திகள்
மின்சாரம் தாக்கி விவசாயி பலி

பாலக்கோடு அருகே மின்சாரம் தாக்கி விவசாயி பலி

Published On 2019-10-24 16:20 GMT   |   Update On 2019-10-24 16:20 GMT
தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே மின்சாரம் தாக்கி விவசாயி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
தர்மபுரி:

தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அடுத்துள்ள நாராயண அள்ளி பகுதியை சேர்ந்தவர் முருகேசன் (வயது 42). விவசாயி. இவர் வீட்டில் மாடு வளர்த்து வருகிறார்.

இந்தநிலையில் முருகேசன் நேற்று மாட்டை வீட்டின் வெளியே உள்ள கொய்யா மரத்தில் கட்டுவதற்காக சென்றார். அப்போது கொய்யா மரத்தின் மீது மின்வயர் அறுந்து விழுந்து மின்சாரம் பாய்ந்து கொண்டிருந்தது. இதனை அறியாத முருகேசன் மாட்டை கொய்யா மரத்தில் கட்ட முயற்சிக்கும்போது முருகேசன் உடலில் மின்சாரம் பாய்ந்தது. 

இதில் உடல் முழுவதும் மின்சாரம் பாய்ந்த நிலையில் முருகேசன் மயங்கி விழுந்தார். இதையடுத்து அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு பாலக்கோடு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். மருத்துவர்கள் பரிசோதனை செய்துவிட்டு முருகேசன் ஏற்கனவே இறந்துவிட்டதாக தகவல் தெரிவித்தனர். 

இதுகுறித்து பாலக்கோடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Tags:    

Similar News