செய்திகள்
சீமான்

அடுத்த தேர்தலில் நின்று விளையாடுகிறேன்- சீமான்

Published On 2019-10-24 15:12 GMT   |   Update On 2019-10-24 15:12 GMT
வரும் பொதுத் தேர்தலில் எப்படி நின்று விளையாடுகிறேன் பாருங்கள் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்.
மதுரை:

விக்கிரவாண்டி, நாங்குநேரி சட்டமன்ற இடைத்தேர்தலில் அ.தி.மு.க. வெற்றி பெற்றது. வெற்றியை தொடர்ந்து அக்கட்சி தொண்டர்கள் ராயப்பேட்டையில் உள்ள கட்சி அலுவலகத்தில் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதற்கிடையே, கட்சி தலைமை அலுவலகத்தில் தொண்டர்கள் மத்தியில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி உரையாற்றினார். அப்போது, இரு தொகுதிகளிலும் அ.தி.மு.க.வுக்கு வாக்களித்த வாக்காளர்களுக்கும், தேர்தல் வெற்றிக்காக உழைத்த கட்சி நிர்வாகிகள் மற்றும் கூட்டணி கட்சிகளின் தலைவர்கள், நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுக்கு நன்றி தெரிவித்தார். 

இந்நிலையில், மதுரை விமான நிலையத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்த நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியதாவது:-

வரும் பொதுத் தேர்தலில் எப்படி நின்று விளையாடுகிறேன் என பாருங்கள். இரண்டு பணக்கார கட்சிகளான அதிமுகவும், திமுகவும் கொள்கை கட்சிகள் அல்ல, கோடி கட்சிகள். இடைத்தேர்தலில் வெற்றி பெற்றுள்ள தெம்பில் இருப்பதால் அவர்கள் உள்ளாட்சித் தேர்தலை நடத்துவார்கள். 

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News