செய்திகள்
மக்கள் தீர்ப்பினை தலைவணங்கி ஏற்கிறோம் - முக ஸ்டாலின்
நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி சடடசபை இடைத்தேர்தலில் மக்கள் தீர்ப்பினை தலைவணங்கி ஏற்கிறோம் என தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சென்னை:
நாங்குநேரி, விக்கிரவாண்டி சடடசபை இடைத்தேர்தலில் அதிமுக கூட்டணி அபார வெற்றி பெற்றது.
இந்நிலையில், நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி சடடசபை இடைத்தேர்தலில் மக்கள் தீர்ப்பினை தலைவணங்கி ஏற்கிறோம் என தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக மு.க.ஸ்டாலின் டுவிட்டரில் வெளியிட்டுள்ள செய்தியில், இடைத்தேர்தலில் இரவு பகல் பாராது உழைத்த அனைவருக்கும் நன்றி.
மக்கள் தீர்ப்பினைத் தலைவணங்கி ஏற்று, வாக்களித்தவர்களுக்கு நன்றி சொல்லும் அதேநேரத்தில், வாக்களிக்க மறந்தவர்களின் நம்பிக்கையைப் பெற, தொடர்ந்து உழைப்போம். கடந்த காலப் படிப்பினைகளுடன், எதிர்காலத்தை நிச்சயம் வெல்வோம் என பதிவிட்டுள்ளார்.