செய்திகள்
பிடிப்பட்ட பாம்பை படத்தில் காணலாம்.

மாற்றுத்திறனாளிகள் பள்ளியில் பாம்பு புகுந்ததால் பரபரப்பு

Published On 2019-10-23 16:18 GMT   |   Update On 2019-10-23 16:18 GMT
தர்மபுரியில் இருந்து சேலம் செல்லும் சாலையில் உள்ள மாற்றுத்திறனாளிகள் பள்ளியில் பாம்பு புகுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
தர்மபுரி:

தர்மபுரியில் இருந்து சேலம் செல்லும் சாலையில் உள்ள இலக்கியம்பட்டி பகுதியில் மாற்றுத்திறனாளிகளுக்கான அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது.பள்ளி வளாகத்திற்குள் திடீரென நல்லப்பாம்பு ஒன்று புகுந்துள்ளது. இதனையறிந்த பள்ளி ஆசிரியர்கள் தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் தெரிவித்தனர். 

இது குறித்த தகவல் அறிந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பின்னர் சாமர்த்தியமாக அந்த பாம்பை உயிருடன் பிடித்தனர்.

இந்த சம்பவத்தால் பள்ளியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
Tags:    

Similar News