செய்திகள்
முதல்வர் பழனிசாமி

தமிழகத்தில் புதிய மருத்துவ கல்லூரிகள் தொடங்க அனுமதி - பிரதமருக்கு முதல்வர் பழனிசாமி நன்றி

Published On 2019-10-23 14:45 GMT   |   Update On 2019-10-23 14:45 GMT
மத்திய அமைச்சரவை கூட்டத்தில் தமிழகத்தில் 6 புதிய மருத்துவ கல்லூரிகள் தொடங்க ஒப்புதல் அளிக்கப்பட்டதற்கு பிரதமர் மோடிக்கு தமிழக முதல்வர் பழனிசாமி நன்றி தெரிவித்துள்ளார்.
சென்னை:

பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை கூட்டம் இன்று நடைபெற்றது. அதில், தமிழகத்தில் 6 புதிய மருத்துவ கல்லுரிகள் தொடங்க ஒப்புதல் அளிக்கப்பட்டு உள்ளது. அதன்படி, தமிழகத்தில் திருப்பூர், நீலகிரி, ராமநாதபுரம், நாமக்கல், திண்டுக்கல், விருதுநகர் ஆகிய 6 மாவட்டங்களில் புதிய மருத்துவ கல்லூரிகள் தொடங்க மத்திய அரசு இன்று ஒப்புதல் அளித்துள்ளது.

இந்நிலையில், தமிழகத்தில் 6 புதிய மருத்துவ கல்லூரிகள் தொடங்க ஒப்புதல் அளிக்கப்பட்டதற்கு பிரதமர் மோடிக்கு தமிழக முதல்வர் பழனிசாமி நன்றி தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக முதல்வர் பழனிசாமி எழுதியுள்ள கடிதத்தில், தமிழகத்தில் 6 மாவட்டங்களில் புதிய மருத்துவக் கல்லூரிகள் தொடங்க அனுமதி அளித்த மத்திய அரசுக்கு நன்றி. பிரதமர் மோடி மற்றும் மத்திய மந்திரி ஹர்ஷ்வர்தனுக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.
Tags:    

Similar News