செய்திகள்
தாக்குதல்

புதுவையில் அரசு ஊழியர் மனைவியை ஆபாசமாக திட்டி தாக்குதல்

Published On 2019-10-23 13:30 GMT   |   Update On 2019-10-23 13:30 GMT
புதுவையில் மாடுகளை சாலையில் இடையூராக கட்டிய தகராறில் தாய்- மகனை தாக்கிய நபரை போலீசார் தேடி வருகின்றனர்.
புதுச்சேரி:

புதுவை  சொக்கநாதன் பேட்டை அணைக்கரை வீதியை சேர்ந்தவர் ஸ்டான்லி (வயது40). பொதுப் பணித்துறை ஊழியர்.இவரது மனைவி பானு. இவரது வீட்டின் அருகே வசிப்பவர் சரவணன். இவர் தனது மாடுகளை சாலையில் இடையூராக கட்டியுள்ளார். இதனை பலமுறை பானு தட்டிக்கேட்டுள்ளார். இதனால் இருவருக்கும் தகராறு இருந்து வந்தது. 

இந்த நிலையில் நேற்று மாலை பானு வெளியே சென்ற போது அங்கு நின்று கொண்டு இருந்த சரவணன் பானுவை பார்த்து ஆபாசமான வார்த்தைகளை பேசியும், ஆபாசமான சைகையும் காண்பித்துள்ளார். இதனை தட்டிக்கேட்ட பானுவிற்கும் சரவணனுக்கும் வாய்த் தகராறு ஏற்பட்டது.

இதனையறிந்த பானுவின் மகன் கார்த்திக் அங்கு வந்தார். அப்போது சரவணனும் மற்றும் அவரது மனைவி சாமூண்டிஸ்வரியும் சேர்ந்து பானுவையும் கார்த்திக்கையும் கையாலும், தடியாலும் அடித்து உதைத்தனர். பின்னர் அக்கம் பக்கத்தினர் உதவியுடன்  கார்த்திக்கை மீட்டு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்று சிகிச்சை பெற்றார்.

பின்னர் இதுகுறித்து கோரிமேடு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து  சரவணனை தேடி வருகிறார்கள்.
Tags:    

Similar News