செய்திகள்
சுவாமிமலை அருகே மது விற்ற 2 பேர் கைது
சுவாமிமலை அருகே போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது மது விற்பனை செய்த 2 பேரை கைது செய்தனர்.
சுவாமிமலை:
சுவாமிமலை போலீஸ் இன்ஸ்பெக்டர் நாகலட்சுமி மற்றும் போலீசார் சுவாமிமலை காவல் சரக பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது திருப்புறம் பியம் உச்சிகட்டளை தெரு தங்கையன் மகன் பிரபு (வயது 32), பொன்பேத்தி சாலை முருகேசன் (41) ஆகிய 2 பேரும் மது பாட்டில்களை விற்பனை செய்தது தெரியவந்தது.
அவர்களை கைது செய்து அவர்களிடமிருந்து 50 மது பாட்டில்களை பறிமுதல் செய்து வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.