செய்திகள்
வழக்கு

டிரைவரை தாக்கி கொலை மிரட்டல்- அரசு போக்குவரத்துகழக மேலாளர் மீது வழக்கு

Published On 2019-10-23 11:22 GMT   |   Update On 2019-10-23 11:22 GMT
டிரைவரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக அரசு போக்குவரத்து கழக மேலாளர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

கம்பம்:

தேனி மாவட்டம் ஜெயமங்கலம் வ.உ.சி. தெருவை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் (வயது45). இவர் கம்பம் அரசு போக்குவரத்துகழக பணிமனையில் டிரைவராக வேலை பார்த்து வருகிறார். சம்பவத்தன்று கம்பத்தில் இருந்து திண்டுக்கல்லுக்கு பஸ்சை ஓட்டி சென்றார். அப்போது கம்பம் டெப்போ மேலாளர் பாண்டியராஜனிடம் சென்று சாலையில் அதிக இடங்களில் வேகத்தடைகளும், பேரிகார்டுகளும் இருப்பதால் சரியான நேரத்திற்குள் சென்று வர முடியவில்லை. எனவே படியை கூடுதலாக்கி தர வேண்டும் என்றார்.

ஆனால் அதனை ஏற்க மருத்த பாண்டியராஜன் நான் சொல்லும்படிதான் நீ வேலை பார்க்க வேண்டும் என கூறி அவரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்தார். இது குறித்து உத்தமபாளையம் கோர்ட்டில் பாலகிருஷ்ணன் புகார் அளித்தார். கோர்ட்டு உத்தரவின் பேரில் கம்பம் வடக்கு போலீசார், அரசு போக்குவரத்து கழக மேலாளர் பாண்டியராஜன் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News