செய்திகள்
விபத்து

கரூர் அருகே விபத்து- அரசு அதிகாரி பலி

Published On 2019-10-23 08:20 GMT   |   Update On 2019-10-23 08:20 GMT
கரூர் அருகே மோட்டார் சைக்கிள் நிலைதடுமாறி கீழே விழுந்த விபத்தில் அரசு அதிகாரி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
கரூர்:

கரூர் காந்திகிராமம் பகுதியை சேர்ந்தவர் ஞானசேகரன் (வயது 54). இவர் கரூர் அரசு மருத்துவமனையில் தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாட்டு கழக ஆலோசகராக பணிபுரிந்து வந்தார். சம்பவத்தன்று வேலை முடிந்து வீட்டிற்கு மோட்டார் சைக்கிளில் புறப்பட்டார். கரூர் உழவர்சந்தை அருகில் செல்லும் போது திடீரென நிலைதடுமாறிய மோட்டார் சைக்கிள், சாலையில் நடந்து சென்ற ஒருவரின் மீது மோதியது.

இதில் நிலை தடுமாறி கீழே விழுந்த ஞானசேகரனின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக கரூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் சிகிச்சை பலனின்றி நேற்றிரவு ஞானசேகரன் இறந்தார். இது குறித்து கரூர் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News