செய்திகள்
கைது

தருமபுரியில் பெண்ணிடம் பணம் பறிக்க முயன்ற 2 பேர் கைது

Published On 2019-10-22 14:47 GMT   |   Update On 2019-10-22 14:47 GMT
தருமபுரியில் பஸ்சுக்கு காத்திருந்த பெண்ணிடம் பணம் பறிக்க முயன்ற 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
தருமபுரி:

தருமபுரி மாவட்டம், அரூர் முருகன்கோவில் தெருவை சேர்ந்தவர் சேகர். இவரது மனைவி சுகந்தி (வயது27). இவர் நேற்று வேலை காரணமாக தருமபுரிக்கு செல்வதற்காக அரூர் பஸ்நிலையத்தில் நின்று கொண்டிருந்தார். 

அப்போது பஸ்சுக்காக காத்திருந்த சுகந்தி கைபையில் இருந்த பணத்தை 2 பெண்கள் திருட முயன்றனர். இதனை சுதாரித்து சுகந்தி அவர்களை பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். 

இது குறித்து அரூர் போலீசார் விசாரணை நடத்தியதில் அந்த 2 பெண்கள் ஊத்தங்கரையை சேர்ந்த மணிவண்ணன் மனைவி சந்தியா (24) என்பதும், அதே பகுதியை சேர்ந்த மஞ்சு (23) ஆகியோர் என்பதும் தெரியவந்தது. பின்னர் அந்த 2 பெண்கள் மீது வழக்குபதிவு செய்து கைது செய்தனர்.
Tags:    

Similar News