செய்திகள்
தாக்குதல்

காவேரிப்பட்டணத்தில் நிலத்தகராறில் வியாபாரி மீது தாக்குதல்

Published On 2019-10-22 14:31 GMT   |   Update On 2019-10-22 14:31 GMT
காவேரிப்பட்டணத்தில் நிலத்தகராறில் வியாபாரியை தாக்கிய 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
காவேரிப்பட்டணம்:

கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணம் சண்முகசெட்டி தெருவை சேர்ந்தவர் கார்த்திகேயன் (வயது 32). வியாபாரம் செய்து வருகிறார். இவருக்கும், காவேரிப்பட்டணம் காந்தி நகரைச் சேர்ந்த சுந்தரேசன், சரவணன் இடையே நில பிரச்சினை இருந்து வருகிறது. 

இந்த நிலையில் சம்பவத்தன்று ஏற்பட்ட பிரச்சினையில், கார்த்திகேயனை கட்டையால் தாக்கி மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதில் காயம் அடைந்த கார்த்திகேயன் காவேரிப்பட்டணம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார். இது தொடர்பாக அவர் காவேரிப்பட்டணம் போலீசில் கொடுத்த புகாரின் பேரில் சுந்தரேசன், சரவணன், நாகர்ஜுன், சீனிவாசன் ஆகிய 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Tags:    

Similar News