செய்திகள்
விபத்து

காவேரிப்பட்டணம் அருகே விபத்தில் தொழிலாளி பலி

Published On 2019-10-22 14:02 GMT   |   Update On 2019-10-22 14:02 GMT
காவேரிப்பட்டணம் அருகே பைக் மீது ஆம்னி பஸ் மோதிய விபத்தில் தொழிலாளி சம்பவ இடத்திலேயே பலியானார்.
கிருஷ்ணகிரி:

தர்மபரி மாவட்டம், நல்லம்பள்ளி அருகே உள்ள ராஜாகொல்லஹள்ளி பகுதியைச் சேர்ந்தவர் தீர்த்தமலை என்பவர் மகன் பூபதி(39). கூலித் தொழிலாளியான இவர், நேற்று மாலையில் தர்மபுரி- கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் ஆத்தோரத்தான்கொட்டாய் பகுதியருகே தனது பைக்கில்சென்று கொண்டிருந்துள்ளார். அப்போது அதே ரோட்டில் வந்த தனியார் ஆம்னி பஸ் பூபதியின் பைக் மீது மோதியது. 

இந்த விபத்தில் பூபதி பலத்த காயமடைந்து சம்ப இடத்திலேயே பரிதாபமாக உயிரழந்தார். இது குறித்து காவேரிபட்டணம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News