செய்திகள்
கோயம்பேடு மார்க்கெட்

தீபாவளி பண்டிகை அன்று கோயம்பேடு காய்கறி மார்க்கெட்டுக்கு விடுமுறை

Published On 2019-10-22 03:23 GMT   |   Update On 2019-10-22 03:23 GMT
தீபாவளி பண்டிகை அன்று கோயம்பேடு காய்கறி மார்க்கெட்டில் இயங்கி வரும் 2 ஆயிரத்து 500 காய்கறி கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்படும் என காய்கறி மார்க்கெட் சங்கத்தின் பொதுச்செயலாளர் தெரிவித்துள்ளார்.
சென்னை:

தீபாவளி பண்டிகை வருகிற 27-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) கொண்டாடப்படுகிறது. தீபாவளி பண்டிகை அன்று சென்னை கோயம்பேடு காய்கறி மார்க்கெட்டில் இயங்கி வரும் 2 ஆயிரத்து 500 காய்கறி கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்படும் என கோயம்பேடு காய்கறி மார்க்கெட் சங்கத்தின் பொதுச்செயலாளர் செல்வராஜ் தெரிவித்தார்.

ஆனால் அன்றைய தினம் மார்க்கெட்டில் உள்ள பழக்கடைகள் வழக்கம்போல் இயங்கும் என்று அங்காடி விற்பனை குழு உறுப்பினர் பழக்கடை ஜெயராமன் கூறினார்.

Tags:    

Similar News