செய்திகள்
கைது

பாலக்கோடு அருகே கஞ்சாவிற்ற வாலிபர் கைது

Published On 2019-10-21 16:14 GMT   |   Update On 2019-10-21 16:14 GMT
பாலக்கோடு அருகே போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு நின்ற ஒருவர் கஞ்சாவை பொட்டலமாக மடித்துக்கொண்டிருந்தார். அவரை போலீசார் கைது செய்தனர்.
தர்மபுரி:

பாலக்கோடு சப்-இன்ஸ்பெக்டர் தணிகாசலம் மற்றும் போலீசார் குற்ற தடுப்பு மற்றும் மதுவிலக்கு பிரிவின் கீழ் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

அப்போது பாலக்கோடு அடுத்துள்ள முங்கப்பட்டி ரெயில்வே பாலம் அருகே கஞ்சாவை ஒருவர் பொட்டலமாக மடித்துக் கொண்டு இருந்தார். இதனை பார்த்த சப்-இன்ஸ்பெக்டர் தணிகாசலம் அவரைப் பிடித்து விசாரணை செய்ததில், பாலக்கோடு அடுத்துள்ள அண்ணாநகர் பகுதியை சேர்ந்த சின்னசாமி மகன் ஆறுமுகம் (வயது 28) என தெரியவந்தது.

இதனைத் தொடர்ந்து பாலக்கோடு போலீசார் வழக்குப்பதிவுசெய்து ஆறுமுகத்தை கைதுசெய்தனர். மேலும், அவரிடம் இருந்து போலீசார் 1,200 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
Tags:    

Similar News