செய்திகள்
தர்மபுரி மாவட்டத்தில் மதுவிற்ற 13 பேர் கைது
தர்மபுரி மாவட்டத்தில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அரசுக்கு புறம்பாக மதுவிற்ற 13 பேரை கைது செய்தனர்.
தர்மபுரி:
தர்மபுரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜன் உத்தரவின்பேரில், தருமபுரி மாவட்ட போலீசார் கள்ளத்தனமாக மது விற்பவர்கள் குறித்து ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது அரசுக்கு புறம்பாக மதுபாட்டிலை வீட்டில் பதுக்கி வைத்து கள்ளத்தனமாக விற்றவர்களை போலீசார் கைது செய்தனர். இதில் தருமபுரியில் 4 பேரும், அரூரில் 3 பேரும், பென்னாகரத்தில் 4 பேரும் மற்றும் பாலக்கோட்டில் 2 பேரும் கைது செய்யப்பட்டனர்.
தருமபுரி மாவட்டத்தில் மொத்தம் 13 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து 100-க்கும் மேற்பட்ட மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.