செய்திகள்
வத்தலக்குண்டு போலீஸ் நிலையத்தை முஸ்லிம் அமைப்பினர் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

வத்தலக்குண்டு, கொடைக்கானலில் ராஜேந்திர பாலாஜியை கண்டித்து முஸ்லிம் அமைப்பினர் போராட்டம்

Published On 2019-10-19 10:52 GMT   |   Update On 2019-10-19 10:52 GMT
இஸ்லாமியர்கள் குறித்து அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேசியதை கண்டிக்கும் வகையில் வத்தலக்குண்டுவில் த.மு.மு.க. மற்றும் மனித நேய மக்கள் கட்சியினர் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
வத்தலக்குண்டு:

இஸ்லாமியர்கள் குறித்து அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேசியதை கண்டிக்கும் வகையில் வத்தலக்குண்டுவில் த.மு.மு.க. மற்றும் மனித நேய மக்கள் கட்சியினர் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

போராட்டத்தில் த.மு.மு.க. நகர தலைவர் இம்தியாஸ், நகர செயலாளர் முகமது ரியால், மனித நேய மக்கள் கட்சி நகர தலைவர் ஹபிப், நகர செயலாளர் அலாவுதின் மற்றும் நிர்வாகிகள் ஜெய்லானி, அன்சாரி, செயின், இத்ரிஸ், பிலால், நிஜாம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இதே போல் கொடைக்கானலில் மூஞ்சிக்கல் பகுதியில் கண்ட ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மனித நேய மக்கள் கட்சி நகர ஒருங்கிணைப்பாளர் சேக் அப்துல்லா தலைமை தாங்கினார். இதில் த.மு.மு.க., மனித நேய மக்கள் கட்சி, எஸ்.டி.பி.ஐ. உள்ளிட்ட கட்சிகளின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

இதனைத் தொடர்ந்து அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது நடவடிக்கை எடுக்க கோரி போலீஸ் இன்ஸ்பெக்டரிடம் மனு கொடுத்தனர்.
Tags:    

Similar News