செய்திகள்
தற்கொலை

மனைவி இறந்த துக்கம் தாங்காமல் விவசாயி தூக்குப்போட்டு தற்கொலை

Published On 2019-10-19 10:26 GMT   |   Update On 2019-10-19 10:26 GMT
கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் மனைவி இறந்த துக்கம் தாங்காமல் விவசாயி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
கோவை:

கோவை மாவட்டம் பொள்ளாச்சியை சேர்ந்தவர் வேலுசாமி( 75). விவசாயி. இவரது மனைவி கடந்த மாதம் இறந்து விட்டார். கடந்த சில நாட்களாக மனைவி இறந்த துக்கம் தாங்க முடியாமல் மன வேதனையுடன் காணப்பட்டார். சம்பவத்தன்று வாழ்க்கையில் விரக்தியடைந்த அவர் வீட்டில் யாரும் இல்லாத போது தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து கோமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கோவை சங்கனூர் பகுதியை சேர்ந்தவர் செல்வராஜ்(வயது 58). பெயிண்டிங் தொழிலாளி.

இவர் நல்லாம்பாளையம் பகுதியில் உள்ள ஒரு கட்டிடத்தில் பெயிண்டிங் வேலை செய்து வந்தார். சம்பவத்தன்று கட்டிடத்தின் மேல் நின்று கொண்டு வர்ணம் அடித்து கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக அவர் கட்டிடத்தின் மேல் பகுதியில் இருந்து கீழே விழுந்தார்.

இதில் அவருக்கு கை, கால்கள் உள்ளிட்ட இடங்களில் பலத்த காயம் ஏற்பட்டது. இதை பார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம்பக்கத்தினர் விரைந்து வந்து அவரை மீட்டு சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து துடியலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News