செய்திகள்
டெங்கு கொசு

கோவை அரசு ஆஸ்பத்திரியில் டெங்கு காய்ச்சலுக்கு சிறுமி உயிரிழப்பு

Published On 2019-10-19 10:16 GMT   |   Update On 2019-10-19 10:16 GMT
கோவை அரசு ஆஸ்பத்திரியில் டெங்கு காய்ச்சலுக்கு சிறுமி உயிரிழந்தார். டெங்கு காய்ச்சல், வைரஸ் காய்ச்சலுக்கு 170 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கோவை:

கோவை புலியகுளம் பெரியார் நகரை சேர்ந்தவர் பாபு. இவருடைய மனைவி விசாலினி. இந்த தம்பதிக்கு தீபிகா என்ற 10 வயது மகள் இருந்தார்.

கடந்த சில வருடங்களுக்கு முன் பாபு இறந்துவிட்டார். இதனால் தீபிகா தனது பாட்டி வீட்டில் தங்கி, மருதூர் மாநகராட்சி தொடக்கப்பள்ளியில் 5-ம் வகுப்பு படித்து வந்தார்.

கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு தீபிகாவுக்கு கடுமையான காய்ச்சல் ஏற்பட்டது. இதையடுத்து அவரை உறவினர்கள் அந்த பகுதியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். ஆனாலும் சிறுமிக்கு காய்ச்சல் குறைந்தபாடில்லை. இதையடுத்து கடந்த 16-ந் தேதி தீபிகா மேல் சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.

அங்கு அவருக்கு டாக்டர்கள் நடத்திய பரிசோதனையில் அவருக்கு டெங்கு காய்ச்சல் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து டாக்டர்கள் தீபிகாவை டெங்கு காய்ச்சலுக்காக அமைக்கப்பட்டு உள்ள தனி வார்டில் வைத்து தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். இருப்பினும் நேற்று சிகிச்சை பலனின்றி தீபிகா பரிதாபமாக இறந்தார்.

கோவை அரசு ஆஸ்பத்திரியில் தற்போது வரை டெங்கு காய்ச்சலுக்கு 30 பேரும், வைரஸ் காய்ச்சலுக்கு 140 பேரும் என மொத்தம் 170 பேர் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். அவர்களை தனி வார்டில் வைத்து டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

Tags:    

Similar News