செய்திகள்
நகை திருட்டு

பெரியகுளம் அருகே வீடு புகுந்து நகை திருட்டு - போலீசார் விசாரணை

Published On 2019-10-19 08:40 GMT   |   Update On 2019-10-19 08:40 GMT
பெரியகுளம் அருகே வீடு புகுந்து 12 பவுன் நகை திருடிய பெண்ணை போலீசார் தேடி வருகின்றனர்.
தேனி:

பெரியகுளம் அருகே உள்ள தென்கரை ஜே.ஆர்.ஆர். நகரைச் சேர்ந்தவர் பால்ராஜ் (வயது 70). இவர் சம்பவத்தன்று தனது உறவினர் வீட்டு விசேஷத்துக்காக வீட்டை பூட்டி விட்டு வெளியூர் சென்று விட்டார். மீண்டும் வந்து பார்த்தபோது அவரது வீட்டு கதவு திறந்து கிடந்தது.

பீரோவில் இருந்த 12 பவுன் நகை திருடு போனது. இதனால் தனது வீட்டுக்கு அடிக்கடி வந்து செல்லும் பெரியகுளம் மாதா கோவில் தெருவைச் சேர்ந்த செல்வம் மனைவி ரபேக்கா மீது சந்தேகம் ஏற்பட்டது.

பால்ராஜ் அவரிடம் கேட்டபோது தான் நகையை திருடியதாக ஒப்புக் கொண்டார். ஆனால் நகையை தர முடியாது என்றும் பால்ராஜை தரக்குறைவான வார்த்தைகளால் திட்டி கொலை மிரட்டல் விடுத்தார்.

இது குறித்து பால்ராஜ் தென்கரை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து நகை திருடியதாக கூறப்பட்ட பெண்ணிடம் விசாரணை நடத்தி வருகின்றார்.

Tags:    

Similar News