செய்திகள்
காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு - கல்லூரி மாணவி தற்கொலை
ஒரத்தநாடு அருகே காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் கல்லூரி மாணவி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஒரத்தநாடு:
தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு அருகே மேலஉளூர் காமராஜ் காலனியை சேர்ந்தவர் சிவக்குமார். விவசாயி. இவரது மகள் சாதனா (வயது 20).
இவர் ஒரத்தநாட்டில் செயல்படும் ஒரு கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வந்தார். அவர் ஒரு வாலிபரை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இது பற்றி அறிந்த சாதனாவின் பெற்றோர் அவரை கண்டித்துள்ளனர். இதில் மனமுடைந்த சாதனா நேற்று மாலை தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுபற்றி தகவல் கிடைத்ததும் ஒரத்தநாடு போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று சாதனா உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஒரத்தநாடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கல்லூரி மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் ஒரத்தநாட்டில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு அருகே மேலஉளூர் காமராஜ் காலனியை சேர்ந்தவர் சிவக்குமார். விவசாயி. இவரது மகள் சாதனா (வயது 20).
இவர் ஒரத்தநாட்டில் செயல்படும் ஒரு கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வந்தார். அவர் ஒரு வாலிபரை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இது பற்றி அறிந்த சாதனாவின் பெற்றோர் அவரை கண்டித்துள்ளனர். இதில் மனமுடைந்த சாதனா நேற்று மாலை தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுபற்றி தகவல் கிடைத்ததும் ஒரத்தநாடு போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று சாதனா உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஒரத்தநாடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கல்லூரி மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் ஒரத்தநாட்டில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.