செய்திகள்
குணசீலம் அருகே அரசு பஸ் மோதி 2 வாலிபர்கள் பலி
மண்ணச்சநல்லூர் அருகே அரசு பஸ் மோதிய விபத்தில் 2 பேர் பலியாகினர். விபத்து குறித்து வாத்தலை போலீசார் வழக்குப்பதிவு செய்து பஸ் டிரைவரிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
மண்ணச்சநல்லூர்:
திருச்சி அரியமங்கலம் முனியப்பன் கோவில் பகுதியைச் சேர்ந்தவர் இசக்கிகண்ணன் (வயது 19). உத்திரபிரதேசம் மாநிலம் சுந்தராபூர் பகுதியைச் சேர்ந்தவர் பப்லுயாதவ் (32). இரு வரும் பொக்லின் எந்திர ஆபரேட்டர்கள்.
நேற்று இசக்கிகண்ணனும், பப்லுயாதவும் மோட்டார் சைக்கிளில் முசிறிக்குசென்று கொண்டிருந்தனர். திருச்சி- சேலம் சாலையில் குணசீலம் அருகே சென்றபோது எதிரே பெங்களுரில் இருந்து திருச்சி நோக்கி வந்த அரசு பஸ் மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
இந்த விபத்தில் இசக்கி கண்ணனும், பப்லுயாதவும் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.
இது குறித்து தகவல் அறிந்ததும் வாத்தலை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று 2 பேரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
விபத்து குறித்து வாத்தலை போலீசார் வழக்குப்பதிவு செய்து பஸ் டிரைவர் சேலம் ஆத்தூர் பகுதியைச் சேர்ந்த ரமேஷ்குமார் (38) என்பவரிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
திருச்சி அரியமங்கலம் முனியப்பன் கோவில் பகுதியைச் சேர்ந்தவர் இசக்கிகண்ணன் (வயது 19). உத்திரபிரதேசம் மாநிலம் சுந்தராபூர் பகுதியைச் சேர்ந்தவர் பப்லுயாதவ் (32). இரு வரும் பொக்லின் எந்திர ஆபரேட்டர்கள்.
நேற்று இசக்கிகண்ணனும், பப்லுயாதவும் மோட்டார் சைக்கிளில் முசிறிக்குசென்று கொண்டிருந்தனர். திருச்சி- சேலம் சாலையில் குணசீலம் அருகே சென்றபோது எதிரே பெங்களுரில் இருந்து திருச்சி நோக்கி வந்த அரசு பஸ் மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
இந்த விபத்தில் இசக்கி கண்ணனும், பப்லுயாதவும் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.
இது குறித்து தகவல் அறிந்ததும் வாத்தலை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று 2 பேரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
விபத்து குறித்து வாத்தலை போலீசார் வழக்குப்பதிவு செய்து பஸ் டிரைவர் சேலம் ஆத்தூர் பகுதியைச் சேர்ந்த ரமேஷ்குமார் (38) என்பவரிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள்.