செய்திகள்
கனிமொழி

சீமான் கருத்து அநாகரீகமானது- கனிமொழி எம்.பி. பேட்டி

Published On 2019-10-19 06:31 GMT   |   Update On 2019-10-19 06:31 GMT
ராஜீவ் காந்தி கொலை குறித்து சீமான் கூறிய கருத்து அநாகரீகமானது என திமுக எம்பி கனிமொழி கூறினார்.
சென்னை:

திமுக எம்பி கனிமொழி செர்பிய சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு இன்று காலை சென்னை வந்து சேர்ந்தார். சென்னை விமான நிலையத்தில் அவர் செய்தியாளர்களை சந்தித்தபோது, அவரிடம் ராஜீவ் கொலை குறித்து சீமான் சர்ச்சைக்குரிய வகையில் பேசியது பற்றி நிருபர்கள் கேள்வி எழுப்பினர்.

இதற்கு கனிமொழி பதிலளிக்கையில், ராஜீவ் காந்தி கொலை குறித்து சீமான் கூறிய கருத்து அநாகரிகமானது, என்றார்.

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியை கொலை செய்தது சரிதான் என்று விக்கிரவாண்டி பிரச்சார கூட்டத்தில் சீமான் பேசியது கடும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. அவருக்கு பல்வேறு தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். சீமான் மீது விக்கிரவாண்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 
Tags:    

Similar News