செய்திகள்
தற்கொலை

சூலூரில் டிரைவர் தற்கொலை - போலீசார் விசாரணை

Published On 2019-10-18 09:48 GMT   |   Update On 2019-10-18 09:48 GMT
சூலூரில் டிரைவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சூலூர்:

கோவை அடுத்த சூலூர் பகுதியை சேர்ந்தவர் கண்மணி(வயது 29). டிரைவர். இவருக்கு திருமணமாகி 1 வயதில் குழந்தை உள்ளது. இந்த நிலையில் கணவன், மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இதனையடுத்து கடந்த 6 மாதங்களுக்கு முன் கண்மணியை அவரது மனைவி பிரிந்து சென்றுவிட்டார். இதையடுத்து கண்மணி தனது மனைவியை பலமுறை தன்னுடன் குடும்பம் நடத்த வருமாறு அழைத்தார். ஆனால் அவர் வர மறுத்துவிட்டார். இதனால் கடந்த சில நாட்களாகவே கண்மணி மனவேதனை அடைந்து காணப்பட்டார்.

இந்த நிலையில் கண்மணி சம்பவத்தன்று தனது நண்பர் கனகராஜ் என்பவரின் வீட்டிற்கு சென்றார். பின்னர் வாழ்க்கையில் விரக்தியடைந்த அவர் அங்குள்ள கழிவறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுபற்றி தகவல் அறிந்த சூலூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Tags:    

Similar News