செய்திகள்
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

அகவிலைப்படி உயர்வு- முதலமைச்சர் பழனிசாமிக்கு அரசு ஊழியர்கள் பாராட்டு

Published On 2019-10-18 08:41 GMT   |   Update On 2019-10-18 08:41 GMT
தமிழக அரசு ஊழியர்களுக்கு 5 சதவீதம் அகவிலைப்படி உயர்த்தியுள்ளதற்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு அரசு ஊழியர்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.
சென்னை:

தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றிய மாநில தலைவர் இரா.சண்முகராஜன், அரசு அலுவலக உதவியாளர் மற்றும் அடிப்படை பணியாளர்கள் சங்க மாநில தலைவர் எஸ்.மதுரம் ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தமிழகத்தில் பணிபுரியும் அரசு அலுவலகம், ஆசிரியர்கள், அலுவலக உதவியாளர்களுக்கு 5 சதவீத அகவிலைப்படி உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த அதிகரிக்கப்பட்ட அகவிலைப்படி 1.7.2019 முதல் கணக்கிடப்பட்டு ரொக்கமாக வழங்கவும் இதன் மூலம் 18 லட்சம் பேர் பயன் பெறவும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆணை பிறப்பித்துள்ளமைக்கு நெஞ்சார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொள்கிறோம். தீபாவளியை சிறப்பாக கொண்டாடும் வகையில் அகவிலைப்படி உயர்த்தப்பட்டு இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.

இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.
Tags:    

Similar News