செய்திகள்
அகவிலைப்படி உயர்வு- முதலமைச்சர் பழனிசாமிக்கு அரசு ஊழியர்கள் பாராட்டு
தமிழக அரசு ஊழியர்களுக்கு 5 சதவீதம் அகவிலைப்படி உயர்த்தியுள்ளதற்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு அரசு ஊழியர்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.
சென்னை:
தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றிய மாநில தலைவர் இரா.சண்முகராஜன், அரசு அலுவலக உதவியாளர் மற்றும் அடிப்படை பணியாளர்கள் சங்க மாநில தலைவர் எஸ்.மதுரம் ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தமிழகத்தில் பணிபுரியும் அரசு அலுவலகம், ஆசிரியர்கள், அலுவலக உதவியாளர்களுக்கு 5 சதவீத அகவிலைப்படி உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த அதிகரிக்கப்பட்ட அகவிலைப்படி 1.7.2019 முதல் கணக்கிடப்பட்டு ரொக்கமாக வழங்கவும் இதன் மூலம் 18 லட்சம் பேர் பயன் பெறவும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆணை பிறப்பித்துள்ளமைக்கு நெஞ்சார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொள்கிறோம். தீபாவளியை சிறப்பாக கொண்டாடும் வகையில் அகவிலைப்படி உயர்த்தப்பட்டு இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.
இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.
தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றிய மாநில தலைவர் இரா.சண்முகராஜன், அரசு அலுவலக உதவியாளர் மற்றும் அடிப்படை பணியாளர்கள் சங்க மாநில தலைவர் எஸ்.மதுரம் ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தமிழகத்தில் பணிபுரியும் அரசு அலுவலகம், ஆசிரியர்கள், அலுவலக உதவியாளர்களுக்கு 5 சதவீத அகவிலைப்படி உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த அதிகரிக்கப்பட்ட அகவிலைப்படி 1.7.2019 முதல் கணக்கிடப்பட்டு ரொக்கமாக வழங்கவும் இதன் மூலம் 18 லட்சம் பேர் பயன் பெறவும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆணை பிறப்பித்துள்ளமைக்கு நெஞ்சார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொள்கிறோம். தீபாவளியை சிறப்பாக கொண்டாடும் வகையில் அகவிலைப்படி உயர்த்தப்பட்டு இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.
இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.