செய்திகள்
மதுசூதனன்

எனது அரசியல் வாழ்க்கையை அழித்தது சசிகலா குடும்பம்- மதுசூதனன் குற்றச்சாட்டு

Published On 2019-10-18 06:23 GMT   |   Update On 2019-10-18 06:23 GMT
1996-ம் ஆண்டு முதல் தனது அரசியல் வாழ்க்கையை சசிகலா குடும்பத்தினர் அழித்து விட்டதாக மதுசூதனன் குற்றம்சாட்டியுள்ளார்.
ராயபுரம்:

அ.தி.மு.க.வின் 48-ம் ஆண்டு விழாவையொட்டி வண்ணாரப்பேட்டையில் உள்ள அலுவலகத்தில் அவைத் தலைவர் மதுசூதனன் இனிப்பு வழங்கினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

அ.தி.மு.க.வின் 48 ஆண்டு காலத்தில் 30 ஆண்டு பொறுப்பில் இருந்து செயல்பட்டு வருகிறேன். 1996-ம் ஆண்டு முதல் எனது அரசியல் வாழ்க்கையை சசிகலா குடும்பத்தினர் அழித்து வந்தனர்.



ஜெயலலிதாவிடம் என்னை பற்றி அவதூறாக கூறி வந்தனர். எனது மரணம் அ.தி.மு.க. கொடியை தாங்கித்தான் நிகழும். ஆர்.கே.நகர் தொகுதி எம்.எல்.ஏ.வாக உள்ள தினகரன் மக்களுக்கு எந்தவித திட்டங்களையும் செயல்படுத்தவில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News