செய்திகள்
பாதுகாப்பு படை போலீசார் மோப்பநாய் மூலம் சோதனை நடத்திய காட்சி.

ரெயில்களில் தடையை மீறி பட்டாசு கொண்டு செல்லப்படுகிறதா?- தஞ்சையில் போலீசார் சோதனை

Published On 2019-10-17 17:25 GMT   |   Update On 2019-10-17 17:25 GMT
தீபாவளி பண்டிகைக்கு இன்னும் சில நாட்களே உள்ளதால் தஞ்சையில் ரெயில்களில் தடையை மீறி பட்டாசு கொண்டு செல்லப்படுகிறதா? என மோப்பநாய் உதவியுடன் போலீசார் சோதனை நடத்தினர்.

தஞ்சாவூர்:

ரெயில்களில் தீவிபத்தை ஏற்படுத்தும் பட்டாசு, வெடிபொருட்கள் கொண்டு செல்ல ஏற்கனவே தடை விதிக்கப்பட்டுள்ளது. தீபாவளி பண்டிகைக்கு இன்னும் சில நாட்களே உள்ளதால் பயணிகள் ரெயில்களில் பட்டாசு கொண்டு செல்ல முயற்சிக்கலாம் என்பதால் தஞ்சை வழியாக செல்லும் ரெயில்களில் நேற்று போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். தஞ்சை ரெயில் நிலையத்தில் பாதுகாப்பு படை போலீசார் மோப்பநாய் உதவியுடன் சோதனை நடத்தினர்.

அப்போது தடையை மீறி பயணிகள் பட்டாசு, வெடிபொருட்களை ரெயிலில் கொண்டு செல்கிறார்களா? என சோதனை செய்தனர். தஞ்சை ரெயில் நிலையத்துக்கு வந்த அனைத்து ரெயில்களிலும் ஏறி போலீசார் சோதனை நடத்தினர். பயணிகள் உடைமைகளை நவீன கருவிகள் கொண்டு சோதித்தனர்.

மேலும் அனைத்து பிளாட்பாரங்கள், பார்சல் அலுவலகங்கள், பயணிகள் தங்கும் அறை உள்ளிட்ட இடங்களில் இந்த சோதனை நடந்தது.

Tags:    

Similar News