செய்திகள்
மாயம்

கோவையில் இளம்பெண் மாயம்- கணவர் புகார்

Published On 2019-10-17 15:53 GMT   |   Update On 2019-10-17 15:53 GMT
கோவையில் இளம்பெண் மாயமானது குறித்து அவரது கணவர் போலீசில் புகார் செய்தார். போலீசார் அவரை தேடி வருகிறார்கள்.

கோவை:

கோவை எஸ்.ஐ.எஸ்.எச். காலனி நேதாஜி நகரை சேர்ந்தவர் சிவசக்தி (வயது 35). அரசு ஆஸ்பத்திரி காவலாளி. இவரது மனைவி அமுதா என்ற அமுதவல்லி (வயது 30). இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். 

இந்நிலையில் கணவன்- மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டது. இதனையடுத்து சம்பவத்தன்று சிவசக்தி மனைவி மற்றும் மகன்களை அழைத்துக்கொண்டு சுங்கம் கல்லுக்குழியில் உள்ள உறவினர் வீட்டுக்கு வந்தார். இங்கிருந்து அவர் வேலைக்கு சென்றார். கடந்த 10-ந்தேதி தனக்கு இன்டர்வியூ இருப்பதாக அமுதா கூறிவிட்டு வெளியே சென்றார். அதன்பின்னர் அவர் வீடு திரும்பவில்லை. 

அதிர்ச்சியடைந்த கணவர் அமுதாவின் செல்போன் எண்ணை தொடர்பு கொண்டபோது செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது. இதனையடுத்து சிவசக்தி ராமநாதபுரம் போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் லதா வழக்குப்பதிவு செய்து மாயமான அமுதாவை தேடி வருகிறார்கள்.

Tags:    

Similar News