செய்திகள்
விபத்து

தேன்கனிக்கோட்டை அருகே தனியார் சிட்பண்டு நிறுவன ஏஜெண்டு விபத்தில் பலி

Published On 2019-10-17 14:49 GMT   |   Update On 2019-10-17 14:49 GMT
தேன்கனிக்கோட்டை அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் தனியார் சிட்பண்டு நிறுவன ஏஜெண்டு பரிதாபமாக உயிரிழந்தார்.
ஓசூர்:

கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகே உள்ள பி.கொத்தப்பள்ளி கிராமத்தை சேர்ந்த சந்திரா ரெட்டி மகன் சுரேஷ்குமார் (வயது 37). தனியார் சிட்பண்டு நிறுவனத்தில் ஏஜெண்டாக பணியாற்றினார்.

இவர் கர்னூல் பஸ் ஸ்டாப் அருகே மோட்டார் சைக்கிளில் சென்றபோது இன்னொரு மோட்டார் சைக்கிள் இவர் சென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த சுரேஷ்குமாரை ஓசூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே இறந்து போனார்.

மோதிய மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபரும் காயம் அடைந்து ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த விபத்து குறித்து மத்திகிரி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News