செய்திகள்
நாங்குநேரி தொகுதியில் வாக்காளர்களுக்கு ரூ.2,000 பணம் விநியோகம்?
இடைத்தேர்தல் நடைபெற உள்ள நாங்குநேரி தொகுதியில் வாக்காளர்களுக்கு ரூ.2,000 பணம் விநியோகம் நடப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
நாங்குநேரி:
தமிழகத்தில் மொத்தம் உள்ள 234 சட்டசபை தொகுதிகளில் நாங்குநேரி, விக்கிரவாண்டி ஆகிய 2 தொகுதிகள் காலியாக உள்ளன.
காலியாக உள்ள இந்த தொகுதிகளுக்கும், புதுச்சேரி மாநிலத்தில் காலியாக உள்ள காமராஜர் நகர் தொகுதிக்கும் வரும் 21-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.
இதனால் இடைத்தேர்தல் நடைபெறும் நாங்குநேரி, விக்கிரவாண்டி ஆகிய தொகுதிகளில் தேர்தல் பிரச்சாரம் சூடுபிடித்துள்ளது.
இந்நிலையில், இடைத்தேர்தல் நடைபெறும் நாங்குநேரி தொகுதியில் வாக்காளர்களுக்கு கொடுக்கவிருந்த ரூ.2,000 நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
பொதுமக்களே பணம் விநியோகித்தவர்களை பிடித்து வைத்ததாக கிடைத்த தகவலை தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு சென்று பறக்கும் படையினர் விசாரித்து வருகின்றனர்.