செய்திகள்
தமிழக அரசு ஊழியர்களுக்கு 5 சதவீதம் அகவிலைப்படி உயர்வு
தமிழக அரசு ஊழியர்களுக்கு 5 சதவீதம் அகவிலைப்படி உயர்த்தப்பட்டு உள்ளது என அரசு அறிவிப்பாணை வெளியிட்டுள்ளது.
சென்னை:
தமிழக அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 5 சதவீதம் உயர்த்தி அரசு ஆணை வெளியிட்டுள்ளது. இந்த அகவிலைப்படி கடந்த ஜூலை மாதம் 1-ம் தேதி முதல் கணக்கிட்டு வழங்கப்படும் என அந்த ஆணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசு ஊழியர்களின் அகவிலைப்படி 12 சதவீதமாக இருந்து வந்த நிலையில், அகவிலைப்படியை 5 சதவீதம் உயர்த்தி தமிழக அரசு ஆணை வெளியிட்டுள்ளது. இதன்படி, அரசு ஊழியர்களின் அகவிலைப்படி 17 சதவீதமாக அதிகரித்துள்ளது.
கடந்த அக்டோபர் 9-ம் தேதி மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படி 5 சதவீதம் உயர்த்தப்பட்டது நினைவிருக்கலாம்.