செய்திகள்
கோப்பு படம்

கிளப்பில் பணம் வைத்து சூதாடிய 34 பேர் கைது - 8 கார்கள், 24 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல்

Published On 2019-10-17 11:59 GMT   |   Update On 2019-10-17 11:59 GMT
திருப்பூர் ஆத்துப்பாளையம் பகுதியில் தனியார் கிளப்பில் பணம் வைத்து சூதாடிய 34 பேரை கைது செய்த போலீசார் 8 கார்கள், 24 மோட்டார் சைக்கிள்களை பறிமுதல் செய்தனர்.
திருப்பூர்:

திருப்பூர் ஆத்துப் பாளையம் பகுதியில் தனியார் கிளப் செயல்பட்டு வருகிறது. இங்கு பணம் வைத்து சூதாடுவதாக திருப்பூர் மாநகர போலீஸ் கமி‌ஷனர் சஞ்சய் குமாருக்கு தகவல் கிடைத்தது.

அவரது உத்தரவின் பேரில் துணை கமி‌ஷனர் உமா நேரடி மேற்பார்வையில் தனிப்படை அமைக்கப் பட்டது. இந்த தனிப்படையினர் நேற்று இரவு சம்பந்தப்பட்ட கிளப்பை சுற்றி வளைத்தனர்.அப்போது அங்கு சூதாடிக் கொண்டு இருந்தவர்கள் போலீசாரை பார்த்ததும் தப்பி ஓட முயன்றனர். அவர்களை போலீசார் மடக்கி பிடித்தனர். 34 பேர் போலீஸ் பிடியில் சிக்கினார்கள். அவர்களை கைது செய்தனர்.

மேலும் அங்கிருந்த ரூ. 360 ரொக்கப்பணம், 24 மோட்டார் சைக்கிள்கள், 8 கார்களை பறிமுதல் செய்தனர். கைதானவர்களிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.
Tags:    

Similar News