செய்திகள்
சில்மி‌ஷம்

அய்யலூர் பாலத்தின் அடியில் பெண் தொழிலாளர்களிடம் சில்மி‌ஷம்

Published On 2019-10-16 13:06 GMT   |   Update On 2019-10-16 13:06 GMT
திண்டுக்கல் அருகில் உள்ள அய்யலூர் மேம்பாலத்தின் அடியில் மில்வேலைக்கு செல்லும் இளம்பெண்களை சில்மி‌ஷம் செய்யும் வாலிபர்கள் மீது போலீசார் நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

வடமதுரை:

திண்டுக்கல் அருகில் உள்ள வடமதுரை, அய்யலூர், வேடசந்தூர் உள்ளிட்ட பகுதிகளில் அதிகளவில் தனியார் மில்கள் இயங்கி வருகின்றன. இந்த மில்களுக்கு பல்வேறு கிராமங்களில் இருந்து இளம்பெண்கள் பணிக்கு வருகின்றனர். இவர்கள் அடிக்கடி காதல்வயப்பட்டு வீட்டைவிட்டு ஓடிச்செல்லும் சம்பவம் நடந்து வருகிறது.

இதுகுறித்து போலீஸ் நிலையங்களில் புகார் அளித்தாலும் பல மாதங்களுக்கு பிறகுதான் அவர்கள் சிக்குகின்றனர். இந்நிலையில் அய்யலூர் மேம்பாலத்தின் அடியில் மில்வேலைக்கு அழைத்துவரும் வேன்கள் அதிகளவில் நிறுத்தப்பட்டு வருகின்றன. குறிப்பாக இரவு நேரங்களில் இந்த வேன்களில் பெண்களை அழைத்துவந்து வாலிபர்கள் சில்மி‌ஷத்தில் ஈடுபடுகின்றனர்.

சாலையை கடந்து செல்லும் வாகனஓட்டிகள் இதைபார்த்து முகம் சுழித்து செல்லும் நிலை உள்ளது. சர்வீஸ் ரோடாக மாற்றப்பட்டுள்ளதால் ரோந்து போலீசார் வருகையும் குறைவாக உள்ளது. இதனை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி சமீபகாலமாக பெண்களிடம் அத்துமீறும் சம்பவம் நடந்து வருகிறது.

எனவே ரோந்து போலீசார் இப்பகுதியில் தினசரி சோதனை நடத்தி வரம்பு மீறும் வாலிபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

Tags:    

Similar News