செய்திகள்
சிவகாசியில் போலீஸ் ஏட்டுகள் மீது தாக்குதல்- 3 பேர் கைது
சிவகாசியில் குடிபோதையில் போலீஸ் ஏட்டுகளை தாக்கியதாக 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
விருதுநகர்:
சிவகாசி கிழக்கு போலீஸ் நிலையம் ஏட்டுகள் கருத்தப்பாண்டி, செல்வராஜ் இரவு ரோந்துப்பணியில் ஈடுபட்டனர். இன்று அதிகாலை அவர்கள் பணி முடித்து வீட்டுக்குச் சென்று கொண்டிருந்தனர்.
விருதுநகர்-தென்காசி சாலையில் சிவகாசி புதுமேடு பகுதியில் சென்றபோது, அங்கு 3 பேர் குடிபோதையில் அரசு பஸ்சை வழிமறித்து தகராறு செய்வதை பார்த்தனர். அதனை போலீஸ் ஏட்டுகள் 2 பேரும் விசாரித்து தகராறு செய்தவர்களை கண்டித்தனர்.
இதில் ஆத்திரமடைந்த 3 பேரும், ஏட்டுகள் கருத்தப்பாண்டி, செல்வராஜ் ஆகியோரை தாக்கிவிட்டு கொலை மிரட்டலும் விடுத்ததாக சிவகாசி கிழக்கு போலீசில் புகார் செய்யப்பட்டது.
இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி அருப்புக்கோட்டை சந்திரசேகர் (வயது 45), சுந்தரமூர்த்தி (32), சூரிய நாராயணன் (38) ஆகியோரை கைது செய்தனர்.