செய்திகள்
கோப்பு படம்

கோவையில் போதை மாத்திரைகளுடன் 2 வாலிபர்கள் கைது

Published On 2019-10-16 11:34 GMT   |   Update On 2019-10-16 11:34 GMT
கோவையில் போதை மாத்திரைகளுடன் 2 வாலிபர்களை கைது செய்த போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவை:

கோவை குனியமுத்தூர் போலீசார் ஜே.ஜே நகர் பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது அங்கு இரண்டு வாலிபர்கள் சந்தேகத்திற்கிடமாக சுற்றி திரிந்து கொண்டிருந்தனர். சந்தேகமடைந்த போலீசார் அவர்களை பிடித்து சோதனை செய்தனர். அப்போது அவர்களிடம் போதை மாத்திரைகள் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவர்களை பிடித்து விசாரணை நடத்தினர் விசாரணையில் அவர்கள் வடவள்ளியைச் சேர்ந்த அற்புதராஜ் (20), தாமோதரன் (28) என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்களை கைது செய்தனர்.

கோவை சரவணம்பட்டி போலீசார் அங்குள்ள தனியார் கல்லூரி அருகே ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது அங்கு 5 வாலிபர்கள் சந்தேகத்திற்கிடமாக சுற்றி திரிந்து கொண்டிருந்தனர். போலீசார் அவர்களிடம் விசாரிக்க அருகில் சென்றனர். அப்போது அந்த வாலிபர்கள் அங்கிருந்து ஓட்டம் பிடித்தனர். போலீசார் ஓடிச்சென்று 2 வாலிபர்களை மடக்கி பிடித்தனர். 3 வாலிபர்கள் அங்கிருந்து தப்பி சென்றனர். அவர்களை சோதனை செய்தபோது அவர்களிடம் கஞ்சா இருந்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் மதுரையைச் சேர்ந்த வல்லரசு (19), கரூரைச் சேர்ந்த ராஜா (20), மற்றும் தப்பி ஓடிய வாலிபர்கள் விக்கி, தருன், அஜித் குமார் என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்கள் வைத்திருந்த 1 கிலோ கஞ்சா, பணம் மற்றும் அவர்கள் பயன்படுத்திய மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்து வல்லரசு மற்றும் ராஜாவை கைது செய்து சிறையில் அடைத்தனர். தப்பியோடிய 3 வாலிபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
Tags:    

Similar News