செய்திகள்
திருச்சியில் திடீர் மழை- பொதுமக்கள் மகிழ்ச்சி
திருச்சியில் இன்று காலை திடீரென மழை பெய்தது. இந்த மழையால் வெப்பம் குறைந்து குளிர்ச்சி நிலவியதால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.
திருச்சி:
திருச்சி மாவட்டத்தில் கடந்த 2 வாரங்களுக்கு முன்பு மாலை மற்றும் இரவு நேரங்களில் பலத்த மழை பெய்தது. அதன்பிறகு கடந்த சில நாட்களாக மழை பெய்யவில்லை.
இந்த நிலையில் இன்று காலை மாநகர் மற்றும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்தது. மேலும் மதியம் 1 மணியில் இருந்து வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது . பின்னர் பலத்த மழை பெய்தது. இந்த மழையின் காரணமாக வெப்பம் குறைந்து குளிர்ச்சி நிலவியதால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.